தொலைந்து நிற்கிறேன் நான்...!!!

கடிகாரமாய் நான்,
எனக்குள்ளே சுற்றுகிறேன்..
சுற்றிகொண்டே என்னுள்,
உன்னை தேடுகிறேன்..!!
மின்சார பார்வையில் என்னை
கொஞ்சம் ஒளிர செய்தாய்..!!
பாலாடை சரிவில் என்
நெஞ்சம் துளிர செய்தாய்..!!
ரத்தம் கலங்கியதே,
பித்தம் தெளிந்ததுவே,
தொலைந்து நிற்கிறேன் நான்,
திருவிழா குழந்தை போல..!!
கண்ணாடி சிரிப்பில் என்னை
கொஞ்சம் உடைத்து விட்டாய்..!!
தங்கமுலாம் பூசிய பேச்சில் என்
நெஞ்சம் அடைத்து விட்டாய்..!!
சற்று தெளிந்து கொண்டேன்,
விட்டு விலகி சென்றேன்,
விழி பிதுங்கி நிற்கிறேன் நான்
வழி தெரியா ஆடு போல..!!
இது சரியா இல்லை தவறா..??
காதல் வலியில்,
தென்றல் காற்று பாரமாகி,
பூகம்பம் பூவாய் மலர்கிறது..!!