ஒரு ஜீவனின் கண்ணீர்

ஆசி கேட்டு தலை சாய்க்கும்

அன்பருக்கெல்லாம் – அவர்

கொடுப்பது ஐம்பது பைசாவாயினும்

ஐந்நூறு ரூபாய்களாயினும்

பாரபட்சமில்லாது ஆசிகளை

அள்ளி வழங்கிவிட்டு

கிடைத்த பணத்தையெல்லாம்

பாகனுக்கு வழங்கிவிட்டு

மெல்ல சுவற்றோரம் சாய்கையில்

அதன் கண்களில் வழியும்

கண்ணீரை – அதன்

ஆசியில் ஆனந்தமாய்

கோயிலை விட்டுக்

கிளம்பும் எவரும்

அறிந்து இருக்க வாய்ப்பில்லை !!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (22-Apr-13, 3:34 pm)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 136

மேலே