மழை வரும்போதினிலே -கார்த்திகா

யாரோடும் காணாத நட்பு
விரலோடு சேர்ந்த குளிர்
கொஞ்சமாய் பனித் துளிகள்
இதமாய் இதழ் கோர்க்கும்
பட்டு ரோஜாக்கள்
நீண்ட முன்பனி இரவு
கதை சொல்லும் விழிகள்
நிஜமாய் இனிக்கிறது
வானின்று தூவிய
சின்ன மழைத் துளிகள்...

எழுதியவர் : கார்த்திகா AK (16-Oct-16, 3:15 pm)
பார்வை : 937

மேலே