எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா 

மேலும்

வெட்டியானின் முணுமுணுப்பு

ஊரே கருமேகம் சூழ்ந்திருந்த வேளையில், அள்ளி முடிந்த தலையில் மல்லிகைப்பூச்சுடி மகாலட்சுமி போல் அமர்ந்திருந்தாள் ... என்ன மசமசன்னு பார்த்துகிட்டு இருக்கிங்க.. அழுதது போதும் சட்டுபுட்டுன்னு ஆக வேண்டியத பாருங்க... என்று வெட்டியானின் முணுமுணுப்பு.... தலையில் வைத்த மல்லிகைப்பூ காயும் முன் அதை தகர்த்த வேண்டிய சூழல்... மாங்கல்யத்திற்கு பூசிய மஞ்சள் கூட நிறமாறவில்லை... மூதாட்டி ஒருத்தி அழுகுறலுடன் வந்தாள்... இந்த பிஞ்சு புள்ளைய வச்சுக்கிட்டு நீ என்ன பன்னப்போரியோ... இப்படி சின்ன வயசுலயே விட்டுட்டு போய்ட்டானே என்றவாறு... கண்ணீரில் மூழ்கி கிடக்கும் என்னவளை எழுப்பி தாலி அறுக்க அழைத்தாள்... காவிரி நீர் கண்களில் வழிந்தவாறு என்னவள் என் கண் முன்னே காட்சியளித்தாள் ... தவழ்ந்து சென்று ஆறுதல் கூற நினைத்தேன் அறியாத வயதில்.... அறியாத முகம் பார்த்து அறிந்து கொண்டாள்.. இனி உனக்காக என் பயணம்... என் உயிர் உள்ளவரை உனக்காக மட்டுமே துடிக்கும் என்று என்னை கட்டியணைத்து புரிய வைத்தாள்... அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்....

 -கௌசல்யாசேகர்-

மேலும்

நான் கட்டும் கட்டிடங்களை எல்லாம் ஓர் அதிசியம் என்று சொல்லவைத்தேன், ஆனால் என்னை பெற்றுயெடுத்த தாய் ஒரு அதிசியம் என்று சொல்ல மறந்து விட்டேன் இப்பூமியில் 

மேலும்

அம்மாவின் புடவை!!


குளிருக்கு இதமாய் என்னதான் கம்பளி போர்வையை போர்த்தி கொண்டாலும் அம்மாவின் முந்தானையை போர்த்தி கொள்வதற்கு ஈடு எதுவும் இருக்காது!!!! 
அம்மாவின் முந்தானை சரிகையை கெட்டியமாக பிடித்து கொண்டு வீதியில் உலா வந்த காலம் அது...இன்றும் நினைவிருக்கிறது!!! குளுறிய போது, மழையில் நினைந்த போது, கண்ணில் பட்ட தூசியை அம்மாவின் மூச்சு காற்றால் புடவையில் ஊதி ஒத்தடம் கொடுத்த போது என வாழ்வில் அத்தனைக்கும் துணையாய் அம்மாவின் புடவை அங்கம்!!! தொட்டிலில் தொடங்கி இன்று வரை அம்மாவின் புடவை என்றால் எனக்கு அதிக பரிட்சயம் !!!
அவ்வாறு தொடர்பு கொண்ட புடவை ஒன்றில் அம்மா ஆசையுடன் தன் கற்பனைக்கே தைத்து கொடுத்த உடைதான் இது 😊

- கௌசல்யா சேகர் 

மேலும்

கோடி கோடி உயிரணுவில் உன் மடியை தேடிவந்தேன்


பத்துமாதம் உள்ளிருந்து , உன் முகம் காண தவமிருந்தேன்

பாலூட்டி சீராட்டி பக்குவமா பாத்துக்கிட்ட

உன் ரத்தம் என்றபின்னும் விட்டு போக
ஏன் நினைச்ச

பிறந்த பிள்ளை அழுதிருக்கும் பின்பு அது சிரித்திருக்கும் 

பிறவி முழுதும் அழுவதற்கா பெற்றெடுத்தாய் என்னை நீயும்..

அம்மா என்றழைக்கையிலே
ஓடிவர யாருமில்லை
கண்ணீரை துடைத்திடவும்
கைகளிங்கே இல்லையம்மா

உறவான தாய்மனமோ
விட்டு போன மாயமென்ன 

பாவி நானும் ஏன் பிறந்தேன்
உன் பாவ கடன் சுமந்திடவா..

கிழக்குமில்லை மேற்குமில்லை
தாயுமில்லை உறவுமில்லை
வரும் திசைகள் வந்திடட்டும்

என் வாழ்வு பாதை சென்றிடவே..

மேலும்

கருவாய் சுமந்து
உருவாய்  தந்து
உறவாய் நிலைத்து-என்
உலகமாய் ஆனவள்.

                           -அம்மா 

மேலும்

அன்னை

அன்பு வைத்து அறவணைத்தாய்
மழலை என்னை பேச வைத்தாய்
இந்தப் பூவுலகை அறிய வைத்தாய்
பத்து மாதம் கருவில் சுமந்தாய்
நீ கடவுள் என புரிய வைத்தாய்

மேலும்

*அம்மா....*
இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான உயிர் அம்மா...

மனிதனால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான வார்த்தை அம்மா...

மூச்சுக்காற்றை கொடுத்து 
தன் மூச்சை பற்றி கவலைக்கொள்ளத தவம் நீ...

நிலத்தில் நீ அமர்ந்து
பிள்ளைக்கு மடியை மெத்தையாக்கும் சுகம் நீ...

உலகம் சுற்றி பார்க்க ஆசையிருந்தும்
தன் பிள்ளையே உலகம் என சுற்றித்திரியும் வரம் நீ...

உன் இமை விட்டு நீங்காமல் இருக்க
இரா பகல் வேறுபாடில்லா 
காலம் நீ...

ஸ்வரங்கள் ஏழும், ராகங்கள் பதினாறும் 
உன் பாட்டுக்கு கண்ணுறங்கும் சங்கீதம் நீ....

மரணம் எதிர்நின்றால் கூட நான் மரணத்தை வென்றவள் என்று மரணத்தையே அஞ்சவிடும் கட்டளை நீ...

நூல் சேலைக்கு சேவை செய்யும் ஆனால் என் சேலை என் பிள்ளைக்கு மட்டுமே சேவை செய்யும் என்ற உணர்வு நீ....

மிதிக்க தெரியாது எனக்கு
உன் மார்பகம் சுரந்த அமிர்தம் என்னில் குருதியாய் இருக்கையில் என்  அனைத்தும் நீ...

ஆயுள் துவக்கம் கொடுத்து
ஆயுள் முடிவுவரை கவனிக்க சொல்லி பொறுப்புகளை துணைவியிடம் தாரைவார்க்கும் குணம் நீ...

எல்லா உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் என்றுமே உயர்வு நீ....

*அன்புடன் அம்மாவின் அடிமை 
                          நாகராஜ்....*

மேலும்

இன்னைக்கும் விடிஞ்சிருச்சு
இத்தன நாள் போயிருச்சு..
 
காலங் காத்தால
கூட்டி வச்ச குப்பையோட
கூட நின்ன பிச்சக்காரி
கூட்டிப்பிடிச்சு -அவ மகளை
ஊட்டி விட்ட கதை..
பாக்கும்போது உன் நெனப்பு 

உள்ளுக்குள்ள  உறுத்துதெனக்கு..

திண்ணையில தட்டு வச்சி
திட்டமா சோறு வச்ச
தின்னையில சிந்துவன் னு
எண்ணி எண்ணி புடி புடிச்சி
ஒவ்வொண்ணா ஊட்டி விட்ட

என் பறட்டை முடியெல்லாம்
கறுக்கும் வரை எண்ணெ வச்ச
கரை பட்ட சட்டையெல்லாம்
வெளுக்கும் வரை நீ துவைச்ச

இத்தனையும் நீ செஞ்ச
இன்னமும் நீ செஞ்ச

பள்ளி பாடம் புரியல னு
படிக்காம இருந்த என்ன
கண்டிப்போட தண்டிச்ச

பட்டினம் போய் நான் படிப்பேன்
பத்து காசு நான் சேப்பன்
பசிச்சா நானே தின்பன்
உன் பாசம் எதுக்கெனக்குனு

எகத்தாளமா வசனம் பேசி
எட்டு வச்சி நான் வந்தன்..

கூட்டி வந்த சித்தப்பன் பாதியில தொறத்திவிட 

படிச்சே ஆகனும்னு பாதி நேரம் வெல செஞ்சேன்
சனிக்கிழமை வந்தா மட்டும்
சத்த நேரம் சாஞ்சிக்கிரன்

வேல எல்லாம் செஞ்சாலும்
வேளைக்கு சாப்பாடில்ல
ஒரு நாயும் கண்டுக்கல

சாமிய பழி சொல்லி
சத்தியமா பயனில்ல
சித்தப்பன குறை சொல்லி
எனக்கொன்னும் ஆனதில்லை

உத்துணர்ந்து பார்க்கயில
தப்பெல்லாம் என் பக்கம்
உள்ளதெல்லாம் சொல்லிட்டு
ஊருக்கு வாறேன் மா

எதிர்த்து பேசினன்னு
ஒதுக்கி வச்சிராத
உட்டுட்டு போனன்னு
ஊட்டாம விட்றாத
ஓங்கி அறஞ்சாச்சும்
ஒன்னோட சேர்த்துக்கோ
ஏங்கி அழுதாலும்
என்ன அணச்சிக்கோ...

இப்படிக்கு
உன் பிள்ளை 

 





மேலும்

                      தாய்மை 

அன்பில் அமிழ்தாய்  இனிக்குும் தாயே 
என் வாழ்வின் வழித்துனை நீயே  சிந்தை முழுவதும் உன் எண்ணம் உன்னை சிந்தித்தாலே என் வாழ்வு மின்னும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் உன் அன்பிலே இவை அனைத்தும் மாயம் அமிழ்தாய் இனிக்கும் பேச்சு நீ தானே என்றும் என் மூச்சு .

மேலும்

மேலும்...

மேலே