எண்ணம்
(Eluthu Ennam)
மது குடித்து தந்தை மயங்கி கிடக்கிறார்...மயங்கியவரின் மகன் மரணித்து... (முத்தரசு சிவா)
07-May-2018 2:34 pm
மது குடித்து தந்தை மயங்கி கிடக்கிறார்...
மயங்கியவரின் மகன் மரணித்து கிடக்கிறான்...
வாழ வேண்டிய வயதில் வாழ்வை தொலைத்து விட்டான்...
சமுதாயத்தை மீட்க சபதம் எடுத்து உயிரை விட்டு விட்டான்...
சாதிக்க வேண்டிய வயதில் சாக துணிந்து விட்டான்...
திருப்பு முனை ஏற்படும் வயதில் தமிழ் நாட்டை திரும்பி பார்க்க செய்து விட்டான்...
துள்ளி விளையாடும் வயதில் தூக்கில் தொங்கி விட்டான்...
சாராயம் என்னும் சாக்கடையால் சாதிப்பதை நிறுத்தி விட்டான்...
மதுவே மரணித்து போ...
மக்களை மரணிக்க தூண்டாதே...
அரசே மது விலக்கிற்கு ஆணையிடு...
மக்களை என்றும் பாதுகாத்திடு...
*வலியின் வரிகள்...*
*சி.முத்தரசு.,*
எதையும் தொலைக்கவில்லை ஆனாலும் ஏதோ ஒரு தேடல் மனதில் நீண்டு கொண்டே போகிறது👩🌾❤
இருள் மூடியும் விழிமூட மறுத்து, காலங்கள் கறைந்தொடுதடி உன் நினைவால்👩🌾❤
மாலை பொழுதில் என்தனிமை, உன் மௌனத்தினை என்னியே தொலைகிறதடி.👩🌾❤
மாலை பொழுதில் என்தனிமை, உன் மௌனத்தினை எண்ணியே தொலைகிறதடி!
போற்றுதற்குரிய படைப்பு
பாராட்டுக்கள் 07-Dec-2017 4:54 am