எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு நான் சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்று..... நமது எழுத்து தளத்தில் தற்போழுது பதிவேற்றப்படும் படைப்புகளின் எண்னிக்கை அதிகமாய் இருக்கின்றது. அதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியே...... ஆனால் அந்தப்படைப்புகளை படிக்க ஆள் இல்லையோ...... என்று தோன்றும் அளவிற்கு நாம் நடந்துகொள்கின்றோம்....... பல நல்ல படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்திவிட்டதைப்போல காண்கிறது... இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு ஒன்றுமட்டுமே தென்படுகின்றது..... நம் எல்லோருக்கும்..... பதிவிடுவதில் இருக்கும் ஆர்வம் கருத்திடுவதில்லை...... படித்து கருத்திடப்படாத  படைப்புகளும் பிறந்தும் பேசாத குழந்தையும் மலர்ந்தும் வாசம் வீசாத மலர்களும்..... வீணே......


பல வரிகளில் படைப்புகளை பதிவிடும் நமக்கு.... ஓரிரு வரிகளில் ஒரு படைப்பாளியின் பதிவிற்கு கருத்திடுவதில்  நாட்டமில்லை...... நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களின் படைப்புகளுக்கு எந்த பதில் கருத்தும் வராத தருணங்களில் எவ்வளவு துன்ப படுகின்றிர்கள்..... அதே துன்பமும் ஏக்கமும் ஏன் மற்ற படைப்பாளிகளுக்கு வரும் (இருக்கும்) என்று நாம் எண்ணுவதில்லை....... 

நானும் ஒரு கட்டத்தில் இப்படித்தான் என் படைப்புகளை எல்லோரும்  படித்து கருத்திடவேண்டும் என்று விரும்பினேன் தவிர நான் யார் பதிவிற்கும் கருத்திடுவதில்லை..... அப்படியிருந்த பொழுதுதான் ஏதோஒரு வசனம் " நீ என்ன விரும்புகின்றாயோ... அதை மற்றவர்களுக்கும் செய்......" என்று படித்தேன்.... அன்றிலிருந்து நான் மற்றவர்களின் படைப்பிற்கு.... கருத்திட்ட ஆரம்பித்தேன்  அவர்களிடம் இருந்து நல்ல பதிலும் வந்ததது. இப்பொழுது எனக்கு பதிவிட நேரமில்லை..... என்றுசொல்லுமளவிற்கு கருத்திட்டு மகிழ்கின்றேன்.... ஏன் என் பழைய பதிவிற்கும் சிலர் கருத்திட்டு மகிழ்வித்தனர்.... என்னவோ.... என் கருத்தை சொல்லிவிட்டேன்..... இதற்க்கு அடுத்தது உங்களின் கையில்தான் இருக்கின்றது....  உங்களின்  இந்தசெயகையால் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திய படைப்பாளிகள் அனைவரும் திரும்பி எழுதவேண்டும் என்பது என் அவா....

பதிவிடும் அளவிற்கு.... மற்றவர்களின் படைப்புகளுக்கு கருத்திடுங்கள்................ 

எழுத்துலகம் உங்களின் கருத்துக்களால் ஒளிரட்டும்....


இந்த பதிவிற்கு கருத்துக்கள் வருமா என்பதே தெரியாது................?!!?☺

மேலும்

எனது பதிவு தேர்வானதே தாங்கள்; சொல்லித்தான் தெரியும்..... இந்த தேர்விற்கு காரணமான எழுத்துலகில் எனது பதிவை பார்த்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் கருத்துகளால் மற்றவரை மகிழ்வித்து சிறந்த படைப்பாளிகளை உருவ்பாக்கிட வேண்டுகின்றேன். 31-Aug-2018 5:09 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :--தங்கள் எண்ணம் படைப்பு தேர்வானத்திற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் போற்றுதற்குரிய தங்கள் எண்ணமும் நம் எழுத்து தளம் குடும்பத்தினரின் கருத்துக்களும் வரவேற்கிறேன் 28-Aug-2018 8:24 pm
சுடரின் அடியில் ஒளிந்திருக்கும் உண்மையை அருமையாக உரைத்தீர்கள் தோழரே.... 22-Aug-2018 7:59 am
என் மன ஆசையை புரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி, மற்றவர்களின் படைப்புகளுக்கும் கருத்திட்டு மகிழ்வியுங்கள். 21-Aug-2018 11:43 am

மேலே