எண்ணம்
(Eluthu Ennam)
தனிமைக்கு என் மேல் காதல் வந்துவிட்டது
அதனால் யாரையும் என்னை நெருங்க விடவில்லை
நான் தனிமையை வெருக்காத நாளில்லை
அதன் அழகையும் ஆழத்தையும் தெரியும் முன் வரை
நண்பர்கள் இருந்தும் மணிக்கணக்கில் உரையாட பிடிக்கவில்லை
அலைபேசி இருந்தும் அதை பார்க்க பிடிக்கவில்லை
காதலி இருந்தும் அவளுடன் கொஞ்சி பேச பிடிக்கவில்லை
பிடித்த பாடலை காதணிகள் மூலம் கேட்க பிடிக்கிறது
உன்னால் என்னிடம் நான் தொலைந்ததை மீட்டெடுத்தேன்
உன்னால் நான் முடிவுகளை சரியாக எடுத்தேன்
யாரும் என்னை நம்பாத போதும் நீ என்னை நம்பினாய்
உன்னால் தான் நான் என்னையே காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
சிலருக்கு துயரமாக தெரியும் நீ பலருக்கு பிடித்த ஒன்றாகத்தான் இருக்கின்றாய்...
புரிதல் அற்ற உறவுகள்...
தடுமாறும் மனங்கள் ....
தடுக்கி விழ செய்யும்
துரோகிகள் ........
பொறுப்பற்ற சமூகம் ....
சுயநலமான சொந்தங்கள் ...
அன்பு என்ற முகமூடிக்குள்
ஆயிரம் பந்தங்கள் .....
இவை யாவும்
விளங்கி கொள்ளும்
தருணம்
வெறுமை அடையும்
மனம்..........
பயணிக்கும்
தனிமையை தேடி .......
அழும் என் கண்ணீர் உனக்கெல்லாம் புரிந்து போவதில்லை..அனுசரனை என்பதுஇங்கு... (Barathi senthil)
23-Feb-2018 12:41 pm
அழும் என் கண்ணீர்
உனக்கெல்லாம்
புரிந்து போவதில்லை..
அனுசரனை என்பது
இங்கு எவர் மேலும்
யாருக்கும்
இல்லவே இல்லை..
தொழும் தெய்வம் எல்லாம்
பிச்சை கேட்க மட்டும் தான்
தெய்வம் தராது
என்று புரிந்தால் கோவிலும்
சுடுகாடு மட்டும் தான்..
நம்மை வைத்துச் செய்யும்
இந்த வாழ்க்கை..
இதன் காரணம் எல்லாம்
நம் வாழும் முறை தவறு
என்று மாறிப் போனதில் தான்..
நீளும் ஒரு தனிமையான இரவில்உறவுகளை தேடும்பொழுதுநினைவுகள் மட்டும் இல்லையென்றால்தனிமை... (anitha ayyappan)
17-Dec-2017 1:02 pm
நீளும் ஒரு தனிமையான இரவில்
உறவுகளை தேடும்பொழுது
நினைவுகள் மட்டும் இல்லையென்றால்
தனிமை என்றோ தற்கொலை
செய்திருக்கும்....
வண்ணமிது வண்ணமடி. வானிருட்டு வர்ணமடி . கருமை யாவும் படருதடி . கவலை நெஞ்சில் நிலவுதடி. நினைப்பவன் நெஞ்சம் உருகுதடி, நிலைகள் இன்றி தடுமாறுதடி, கனவுகள் யாவும் தொடருதடி, கனவிலே என் கன்னி உலவுதடி, நெஞ்சில் என்றும் வாழுமடி இதை உணர்ந்தேன் இன்று தனிமையிலடி, வாழ்வோம் ஒரு வாழ்க்கையடி வயதினை மிஞ்சிய நாட்கலடி போகும் தொலைவு தூரமடி முடிவுகள் என்று ஒன்று இல்லையடி .....
தனிமை ,............................😵நம் ,,,,,,,,,,🤔🤗,,என்ற சொலின் வலிமை தனிமையில் கிடைக்காது... (yazararafath)
08-Oct-2017 1:29 am
தனிமை ,............................



தனிமையில் இருக்கும் நிம்மதியை யாரும் தர முடியாது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அயல் நாட்டு தனிமையில்!!! ஆயிரம் உரவுகள் அருகில் இருந்தாலும்எதிர்கால... (நெல்லை நண்பன் அபுதாஹிர்)
27-Jul-2016 1:30 pm
அயல் நாட்டு தனிமையில்!!!
ஆயிரம் உரவுகள் அருகில் இருந்தாலும்
எதிர்கால கேள்விகள் எதிரில் இருக்கும்-போது
பதிலை நம்மனதோடு மட்டும் பகிர்வதே தனிமை
அத்தனிமையை குறையாக என்னுவதைவிட
தவறாக என்னுவதே சிறந்தது.....சிலர்
கவிதை படைக்க கனவுகள் வேண்டும் என்பார்கள் ஆனால் கனவை படைக்க தனிமை வேண்டும்
தனிமை சிலரை நட்சத்தீரத்தை எண்ணச்செய்யும்
ஒரு சிலரை நட்சத்தீரமாய் மின்னச் செய்யும்,
பலரின் லட்சியங்கள் பல இலட்சத்தில் முடிவதுபோல்
பலரின் தனிமை பல தவறிலேயே முடிகிறது, இத்தனிமைகள் எல்லோருக்கும் ஏற்படும்
சிலருக்கு கல்லூரி விடுதியில் பலருக்கு அயல்நாட்டு வாழ்க்கையில் இதில் நட்சத்தீரத்தை எண்ணச்செய்வதை விட நட்சத்தீரமாய் மின்னச் செய்பவனே வெற்றி அடைகிறான்........