களைகளின் கள்ளத்தனம்.....!

வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு
வயல்வெளியில் பாடுபட்டனர் என் பாட்டனார்கள்

kalaikal முந்திக்கொண்டு முளைத்துவர
களைக்கொத்தியால் வேரறுத்தனர்

பணக் கஷ்டத்தை போக்குவதற்கு
பாடுபட்டனர் என் அப்பா, சித்தப்பாக்கள்

களைகள் கைகோர்த்து வந்தன
கைகளை ஆயுதமாக்கிப் பிடுங்கி எறிந்தனர்

நிலங்களை காப்பாற்ற நானும் பாடு படுகிறேன்
களைகளோ கள்ளத்தனம் செய்து கட்டிடங்களாக.....!

எழுதியவர் : நா.வளர்மதி. (12-Jan-13, 10:19 am)
பார்வை : 157

மேலே