கருணா நீயும் தமிழனா ...?
கற்பு நெறி தமிழன் உரிமை
காரணம் கலாச்சாரம்
கண்முன்னே பலகன்னிகளை சிதைத்தானே
காரியகாரனுக்கு துணை தமிழன் கருணா
கருணா ...?
பாரடா நீ வகுத்த வழியை
பணத்தை பரிசாய் பெற்றாய்
பலரை பிணமாக்கினாய்
பாவங்கள் ஏன் உன்னை மட்டும் விட்டது
உன்னதமான கருணா எனும் நாமத்தை
உனக்கிட்ட தலைவனை மறந்தாய்
உதிரத்தை பாலாக தந்த
உன் தமிழ் தாயை மறந்தாய்
உன்னை நம்பிய தமிழ் மக்களை மறந்தாய்
உள்ளதையும் உயிரையும் தந்த கர்ணனையும் மறந்தாய்
உன்னால் அழிந்த
உடமைகள் எத்தனை
உடல்கள் எத்தனை
உறவுகள் எத்தனை
உரிமைகள் அத்தனையும் இல்லையடா
உண்மை தமிழன் வாழ்வது எப்படியடா..?
கருணா நீயும் தமிழனா ....?