[413] கலக்கிடும் நாட்கள் ....(அறுசீர் விருத்தப்பா)

நீரின்றிக் காயவோ நிலமுமே!
==நீருண்டு மாயவோ இளமையும்!
வேரின்றிக் கொள்வதோ கல்வியை!
==விதையின்றிப் பெறுவதோ கனிகளை!
தேரின்றி நடத்தவோ திருவிழா!
==தெளிவின்றித் தேர்வதோ ஆட்சியும்!
கூரின்றிப் போகவோ நாடிதும்!
==கூத்தென்றும் ஆடவோ வாழ்வுமே!


இலக்கின்றிச் செல்லவோ வாழ்க்கையும்!
==இலட்சமே குறிகளோ தேடவும்!
விலக்கின்றிக் கொள்வதோ அனுபவம்!
==வெறிநின்றும் ஆட்டவோ உணர்வுகள்!
சிலர்க்கென்று போடவோ திட்டமும்!
==சிறுத்தின்றிப் போகவோ பண்புகள்!
கலக்கிடும் நாட்களில் வாழ்கிறேன்,
==கைகொடுத் துதவ,வா! கர்த்தனே!
=0=

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Feb-13, 9:53 am)
பார்வை : 159

மேலே