கம்பம் பி.டி.முருகன் @ அம்பை சுதர்சனன்

இவரது காலடி சுவடுகள்
வேளாண்மை பொறியியல் பக்கத்தில்
நீங்கா நினைவாக.

அரசு துறை தணிக்கையோடு
ஆலய வாசலும் இவருக்கு அத்துபடி.
தேவி இதழின் எழுத்துலக செல்லபிள்ளை
நட்புகளின் முன்னுரை இவரது முகவரி.

தெரிந்தவர்களுக்கு
இவர் பிழைக்க தெரியாதவர்
தெரியாதவர்களுக்கு
புரியாத புதிர்.

இவரது பலவீனம்
அளப்பரிய நினைவாற்றல்.
காலன் கவர்ந்த பெற்றோரை
காலம் முழுக்க மறவாதவர்.
மறந்தும் மறக்காதவர்.

அம்மா மண்டப ஆற்று மணலில்
அம்மா அப்பனுக்கு
அமாவாசை நாட்களை
அரிச்சுவடி போட்டவர்.

இந்த முருகனை
மறந்தும் மறப்பேனா?
அமாவாசைகளுக்கு விதை போறவர்.

எழுதியவர் : (7-Mar-13, 3:56 pm)
சேர்த்தது : அம்பை சுதர்சனன்
பார்வை : 138

மேலே