..............விபரீத தாலாட்டு.............

"மறந்துவிடு மறந்துவிடு"
என தாலாட்டுகிறது உன் வார்த்தைகள் !
தளர்ந்துவிடுகிறேன்,
அந்த ஓசை ரீங்காரமாய் சுழல்வதில் !
சரியென்று புரியத்துணிகிற மனம்,
எதிர்கொள்கிறது மனச்சாட்சியின் கேள்வியை !
நீ தரும் பிரிவு அவளுக்கு நிம்மதியைத்தருமா?
அல்லது?
காலம்முழுதும் கசக்கிற வேதனைக்கு வேர் வைக்குமா?
ஏன் நீ அவள் வார்த்தைகளை மதியாது,
அவளுடனேயே தங்கிவிடக்கூடாது?
ஒருவேளை அது காதல் கொலையாகுமா?
பேசாமல் தற்கொலை செய்ய வை உன் காதலை !
வாழ்ந்து சாகட்டும் அவள் எடுத்த முடிவு !
உன்மேல் பாய்ந்து படரட்டும் அவள் விபரீதத்தாலாட்டு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Mar-13, 8:13 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 86

மேலே