வெட்கத்தோடு ....
தலை கவிழ்ந்து கீழ் நோக்கி
புருவம் விரிந்து மேல் நோக்கி
அம்பாய் பாயும் கூர் விழிகள் எனை நோக்கி,
பூவிதல்களில் புன்னகை ஏந்தி
மனதிலே நாணம் ஏந்தி
கால் விரல்கள் தரையை தோண்ட
கை விரல்கள் பின்னிப்பிசைய
இடையினை வளைக்காமல் வளைத்தும்
எனை பார்க்கிறாள் வெட்கத்தோடு !! ....
- - - ப.ஹரிஷ்குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
