கொண்டாடுவோம்!
.
காந்திக்குக் கோவில் கட்டி
கற்பகிரகம் ஏற்றுவோம்.
மனிதரில் தெய்வமாக
மனிதகுலம் வணங்குவோம்.
நாட்டுக்குழைத்த நல்லோரை
நாட்டுவோம் கோபுரத்தில்.
வானுயரக் கொடிமரத்தில்
வண்ணக் கொடியேற்றுவோம்.
விடுதலைத் திருவிழாவை
வீடுதோறுங்கொண்டாடுவோம்
வீதிகளில் வடம் பிடித்து
பாரதத்தேர் வலம் வருவோம்.
பாரதியார் பாடல்களை
பசனையாகப் பாடுவோம்..
தாகூரின் படைப்புகளை
கீதையாகப்.போற்றுவோம்.
பக்தருடை கதருடுத்தி
பாதயாத்திரை செல்லுவோம்.
மறந்து போனதேசியத்தை
மறுபடியும் சொல்லுவோம்.
.