இனிமை நிலையாய் வாழியவே

நீலக் கடலில் தனியே ஒருபடகு
பகற் பொழுதில் பளிங்காய் !

செந்நிற மேனியுடன் உறங்கிடும்
பொன்னிற மண்ணில் ஒருவன் !

அலைகள் இல்லாத கடலினிலே
அசைந்து செல்லும் படகோ அழகு !

சந்தடியே இல்லாத மணற் பரப்பில்
சயனிக்கும் மனிதனும் அழகு !

எல்லை தெரியா அமைதிக் கடலில்
வெள்ளை நிறத்தில் பாய்மரப் படகு !

கண்ணில் தெரியும் கடற்கரை ஓரம்
மண்ணின் மடியில் மனிதன் !

கண்டிடும் காட்சியும் நமை கவர்கிறது
கவிதையும் நெஞ்சில் தோன்றியது !

தனிமை எவருக்கும் தனி இன்பமே
இனிமை நிலையாய் வாழியவே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Mar-13, 6:57 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 121

மேலே