நட்பு
களைந்து போகும் மேகம் போல்
வடிந்து ஓடும் வெள்ளம் போல்
உருகி ஓடும் நீர்த்திவலையல்ல
நட்பு உயிரின் வலி
காலம் மாறும்
கோலம் மாறும்
கனவு மாறும் மனக் கனதி கூடும்
நட்பு நட்பாகவே இருக்கும்
தொன்னூரு வயதிலும் தொலையாது
நல்ல நட்பு
கண்களில் குழிவிழுந்து
கால்கள் நடைபின்னி
தள்ளாடி விழும் வேளை
தாங்கி பிடிக்க
நண்பர்கள் வந்தால்
மனது சிறகடிக்கும்
மரணமும் தோற்று போகும்