பயந்தோம்,,,, வியந்தோம்,,,,(ஹுஜ்ஜா)

கதிரவன் கண்டு
---வியந்து போனான் - அதை
கடவுள் என்றெண்ணி
----நன்றி சொன்னான்.

பாம்பை கண்டு
---பயந்து போனான் - அது
தீண்டாமல் இருக்க
----தெய்வம் என்றான்.

மலைகள் கண்டு
---மலைத்துப் போனான் -அதில்
சிலைகள் வடித்து
----வணங்கி நின்றான்.

பயந்ததும் வியந்ததும்
---இறைவ னென்றான்
படைத்தவன் அவனை
---மறந்துவிட்டான்.

கண்டதும் காணாததும்
---கடவு ளென்றான்
அண்டத்தின் அரசனை
----ஒதுக்கிவிட்டான்.

எழுதியவர் : hujja (14-Apr-13, 11:00 am)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 163

மேலே