சுனாமி...!
சுனாமியே உன்னுடைய
சூழ்ச்சியால்
வீழ்ச்சி அடைந்தவர்களை
விரல்விட்டு
என்ன முடிவில்லையே?
உன் மூச்சுக்காற்றை
முனகவிட்டு
எங்களின் உயிர்க்காற்றை
முடக்கிவிட்டாயே?
நீ அரைமணிநேரம்
அழுதுவிட்டு
எங்களை ஆயுள்முழுவதும்
அழவைத்துவிட்டாயே?
உன்னை இருகரம் கூப்பி
கேட்டுகொள்கிறேன்
இனியும் இயற்க்கை
எனும் வடிவில் வந்துவிடாதே
வந்து பல இம்சைகளை தந்துவிடாதே...!