சுவாசித்து உன் நினைவுகளை
எத்தனை இயற்கை அதிசயங்கள்
உன் அன்பான வார்த்தைகளில்
மட்டுமே தெரிந்துகொண்டேன் .
எத்தனை விபத்துக்கள்
பூகம்பம்கூட செய்யாத மாற்றத்தை
உனது இதழோர
புன்னகையில்தான் உணர்ந்துகொண்டேன் .
இறந்து போவது
உடல்கள் மட்டும் இல்லை
உணர்வுகளும்தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்றுத்தந்தது .
உன் மடியில் தலை சாய்த்து
உறங்கிப்போன நிமிடங்களை எல்லாம்
மீண்டும் புதிப்பிக்க
முயற்சித்து தோற்றுப்போகிறேன் .
இறந்து போவேனோ
என்பதற்காக சுவாசிக்கவில்லை
ஒரு வேளை
உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்