நீ வெறுத்த நிமிடத்தை விருப்புகிறேன்....

என்னவனே ...

காதலை கற்று தந்தவனே ...

காதலின் வலிகளை உணரவைத்தவனே ...

தீயாய் என்னை எரிக்கும்
தனிமையை ரசிக்க
கற்று தந்தவனே ....

இன்று வெறுப்பையும்
விரும்ப வைத்தாய் என்னை....

என் விழிகள் உன் முகம்
காண இமைத்த போது

உன் விழிகள் என்னை தொட
மறுத்த நிமிடத்தை
நான் விரும்புகிறேன் ....

அந்த ஒரு நொடியாவது
என்னை உன் உள்ளம்
நினைத்ததை எண்ணி....

திரும்ப திரும்ப நினைக்கும் போது
வலியால் என் இதயம் துடித்தாலும்
துன்பத்திலும் சிறு புன்னகை என் இதழில் ...

என்னவனின் இதயம் என்னை
நினைத்து ஒரு நொடியாவது
துடித்ததே என எண்ணி....

என் மீது வெறுப்பு என்னும்
அன்பையாவது - நீ
காட்டியதை எண்ணி மகிழ்கிறேன்
என்னுள் இந்த நொடி வரை....

என்னை வெறுப்பதாய் உன்னையே
நீ ஏமாற்றுகிறாய் என ஏன்
உள்ளத்திற்கு புரியவில்லை....

புரிய வைக்க நினைக்கும்
என்னையும் ஏனடா வெறுக்கிறாய்
காரணம் சொல்லாமல் ...

என் சுவாசம் நிற்கும்
கடைசி நொடிவரை
முயற்சிப்பேன் -என்
அன்பை உனக்கு புரியவைக்க....

எழுதியவர் : சங்கீதா.k (14-May-13, 1:06 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 335

மேலே