என்னால் மட்டுமே முடியும்

உன் விரல் தொட நினைத்திருந்தால் - என்
இதயம் அங்கு வீணையாகுமே....
உன்பாதம் பட நினைத்திருந்தால் - என்
இதயம் அங்கு பூமியாகுமே.....

உன் உடல் பார்த்து வரும் உணர்ச்சியல்ல
உன் உள்ளத்தை பார்த்து வரும் உணர்ச்சி

கால்களில் முள் குற்றினால்
கண்களில் நீர் வருவதில்லையா
அறிவுக்கு எட்டி- காலில் இருக்கும்
முள்ளை எடுப்பதில்லையா........

உன் காலில் பட்ட முள்ளாய் தானடி
என் காதலையும் நீ நினைத்தாய்
எப்படியோ எட்டாத உயரத்தில் இருக்கும்
உன்னை என் உணர்ச்சிகள் - உன்
இதயத்தை தொட்டாலே போதுமென நினைக்கின்றன்

இனியென் உணர்ச்சிகளை தட்டிவிட்டு - என்
உறக்கத்தை கலைக்க நினைத்தால் - அது
உன்னால் முடியாது - ஏன்? என்றால்
எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும்
என்னால் மட்டுமே முடியும்.......,

எழுதியவர் : வ.மெய்யப்பன் (15-May-13, 8:51 pm)
பார்வை : 240

மேலே