என்னால் மட்டுமே முடியும்
உன் விரல் தொட நினைத்திருந்தால் - என்
இதயம் அங்கு வீணையாகுமே....
உன்பாதம் பட நினைத்திருந்தால் - என்
இதயம் அங்கு பூமியாகுமே.....
உன் உடல் பார்த்து வரும் உணர்ச்சியல்ல
உன் உள்ளத்தை பார்த்து வரும் உணர்ச்சி
கால்களில் முள் குற்றினால்
கண்களில் நீர் வருவதில்லையா
அறிவுக்கு எட்டி- காலில் இருக்கும்
முள்ளை எடுப்பதில்லையா........
உன் காலில் பட்ட முள்ளாய் தானடி
என் காதலையும் நீ நினைத்தாய்
எப்படியோ எட்டாத உயரத்தில் இருக்கும்
உன்னை என் உணர்ச்சிகள் - உன்
இதயத்தை தொட்டாலே போதுமென நினைக்கின்றன்
இனியென் உணர்ச்சிகளை தட்டிவிட்டு - என்
உறக்கத்தை கலைக்க நினைத்தால் - அது
உன்னால் முடியாது - ஏன்? என்றால்
எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும்
என்னால் மட்டுமே முடியும்.......,