மனசுக்குள் பேசிடும் தென்றல்....!
மனமென்னும் மலர்ச் சோலையில்
மலராக நானிருக்க
மகரந்தமாக நீ இருந்தாய்!
காதலெனும் தென்றல் வீச
காதலால் நானும் சிரிக்க
ஆதலால் நீ என் இதயமானாய்!
நீரைப்போல உன் நினைவுகள் ததும்பி நிற்க
தேரைப்போல என் மனமும் ஜொலித்திருக்க
வேரைப்போல நீயும் என்னில் பதிந்தாயே.....!