விட்டுக்கொடுத்துவிட்டேன்

எழுத்துக்கள் மீது
இருக்கும் விசிறிகள்
புள்ளிகள் போல் இருக்கிறாய்
நான் வெறும் உச்சரிப்புத்தான்

என் கண்கள் வலியாவதையும்
அழுவதையும் விரும்புகிறேன்
அதை தந்தவை நீ என்பதால்

நான் யாருக்காகவும்
எதற்காகவும் விட்டு
கொடுக்கும் பழக்கம்
இல்லாதவன் -இப்போ
என்னையே
விட்டுக்கொடுத்துவிட்டேன்

கஸல் ;154

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (18-Jun-13, 4:42 pm)
பார்வை : 76

மேலே