விழி தீண்டலில் விதைத்தவை..(பாகம்-1)

என்ன செய்தாய் என்னை
நீ இல்லாமல்
இருபத்தைந்து வருடம்
வாழ முடிந்த எனக்கு.
இப்போதெல்லாம்
ஐந்து நொடிகள் கூட
வாழ தெரியவில்லையே..
****************************************************************************
என்னை செல்ல பெயர்
வைத்து அழைத்து அழைத்தே
என் உண்மை பெயரை
மறந்தவன் தானே நீ....!
****************************************************************************
வருடங்கள் போன பின்பும்
உந்தன் காதல்
இப்படியே இருக்குமா..?
என கேட்கும்
என் அப்பாவி கணவா
நீ அறிவியல் அறிந்ததில்லையா
உயிருள்ளவை எல்லாமே வளரும் என்று ..!
****************************************************************************
"உன் நினைவுகள்
என் இரத்தத்தில் கலந்துவிட்டது"
என சொன்ன உனக்கு
எப்படி மனம் வந்தது
இன்று "இரத்த தானம்" செய்ய....!
****************************************************************************அலை பேசியில்
உன்னை அழைக்கையில்
ஏதோ ஒரு குரல்
தொடர்பு கொள்ள முடியாது
என்பதை கேட்டதற்கே
உயிர் ஒரு நிமிடம்
நின்றுவிட்டு துடிக்கிறதே..
****************************************************************************

எழுதியவர் : kavithayini (18-Jun-13, 7:35 pm)
பார்வை : 136

மேலே