+நானிருக்கும் வரை உன் நினைவிருக்கும்!+

உனைப்பற்றிய கவிதையை
முதலில் நான்
காகிதத்தில் எழுதினேன்...

காகிதம் கிழிந்துவிட‌
கணினியில் எழுதினேன்...

கணினி அழித்துவிட‌
என் நினைவில் எழுதுகிறேன்...

நானிருக்கும் வரை
உன் நினைவிருக்கும்...

என் நினைவிருக்கும் வரை
உன் கவியிருக்கும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Jul-13, 10:33 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 92

மேலே