இங்கே ஈழம்..!

இனி இதயம் எப்படி துடிக்கும்
இரு விழிகள் நீரை வடிக்கும்?
காலோடியது போதும் நிறுத்து
கரங்களை தருவாய் செறுத்து
இணைந்தால் கைகள் முறுத்து
இமயமும் பொடியும் வறுத்து
எதிரியின் வாள்முனை ஒடித்து
எழுந்துவா எமனையும் ஜெயித்து
தமிழனின் வீரகதை படித்து
தலையை கொய்துவா அறுத்து
தமிழனம் அகதியாய் தவித்து
தரம்கெட்டு கிடக்குதே குவித்து
இங்கொரு ஈழம் இல்லையேல்
இனி தமிழினமிங்கு இல்லையே
இருந்தது போதும் எழுந்துவா
இனி நீதான் தலைவன் ஓடிவா
சிறுத்தை சினம்மேற கண்டால்
சிங்கங்களும் சிறுத்து சிதறும்
உரக்க சொல்லுவோம் உலகுக்கு
உயிரெடுத்தாலும் சாகமாட்டோம்
உரிமை பெறாமல் வீழமாட்டோம்
உதயமாகும் ஒரு தமிழின ஈழம்
புலிகொடி அன்று எங்கும் பறக்கும்
புவியது கண்டு புல்லரித்து நிற்கும்...!

குமரி பையன்

எழுதியவர் : குமரி பையன் (9-Aug-13, 11:04 pm)
பார்வை : 109

மேலே