விழியோரம் மச்சம் கொண்டவளே 555

என்னவளே...

உன் விழிகள்
வீச்சில்...

சூரியன் கூட
யோசிக்கும்...

உன்னை தொட
வெயிலாக...

புன்னகை பூக்கும்
உன் இதழ்களில்...

பிரியாமலே
மெல்லியதாய்...

தேன் எடுக்க
ஆசையடி...

உன் இதழ் பூக்களில்
பூமகளே...

இமையே இல்லாமல்
இருக்கும்...

உன் இமையை கிள்ளி
பார்க்க ஆசையடி...

சூரியனை சுட்டெரிக்கும்
உன் விழியில்...

என் இதழ்
பதிக்க ஆசையடி...

உன் விழியோரம் மச்சம்
காணும் போப்தெல்லாம்...

உன் அழகிற்கு பிரம்மன்
வைத்த திஷ்டி பொட்டடி...

அழகின் மொத்த
உருவமே...

வைக்க வேண்டுமடி
மீண்டும் திஷ்டி பொட்டு...

உனக்கு என்
கைகளால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Aug-13, 4:09 pm)
பார்வை : 104

மேலே