காதல் பித்தனாக
காதல் எனும் கதை படித்தேன்
கவியாயிரம் நான் படைத்தேன்
களவாடிய விழிகளை நினைத்தே
காற்றோடு மனச்சிறகு விரித்தேன்
உன்னோடு
சில காலம் வாழ நினைத்தே
பல காலம் கடந்துவிட்டேன்
அம்மாவாசை என்றறிந்தும்
நிலவுக்காக காத்திருந்தேன்
கண்ணோடு கனவு கொண்டு
நெஞ்சோடு உன் நினைவு கொண்டு
வாழ்கிறேன் ....................
வாழ்கிறேன் ...................
வாழ்கிறேன் ...................
காதல் பித்தனாக