சாதி முரண்

நீ என்னை சீரழிக்கையில்

உன் உடலில்

நான் பதித்த

என் விரல்

நக நுனிகளின்

இரத்த வரிக்கோடுகள் ,

உன்னில்

ஜாபகப் படுத்தும்

இந்த ஒதுக்கப் பட்டவளின்

ஜென்ம வெறு உமிழ்வை .

நீ தீண்டாது ஒதுக்கிய

ஒரு சமூகத்தின்

பிரதி பலிப்பாய் நான்

உன் வெறிக்கு

இரையான

என் யோனிச் சதை மட்டும்

எப்படி விதிவிலக்கானது

மிருகமே?

எழுதியவர் : PIRAINUDHAL (31-Dec-10, 1:11 pm)
சேர்த்தது : pirainudhal
Tanglish : saathi muran
பார்வை : 459

மேலே