மலையே விஞ்சும்

மலையைப் பார்த்து திகைக்க
அதன் கம்பீரத்தை நோக்கி அசர
அது தொடும் நீல வானத்தை கண்டு மிரள
அதில் குடியிருக்கும் பறவைகளின் குரலை
கேட்டு பரவசமாக
அங்கு ஏகாந்தமாக வாழும் மிருக இனத்தை சற்று
பயம் கலந்த லயிப்புடன் ஆனந்திக்க
அந்த கரு கரு வென்ற வளர்ந்த மரங்களை
ஆசையுடன் தழுவ
காய்த்து குலுங்கும் பழங்களை எட்டி எட்டி
பறிக்க ஆவல் தூண்ட
மலையைக் கண்டு வியந்து வியந்து மலைத்து
மலைத்து விம்மிதம் அடைகிறான்
அழகை ஆராதிக்கும் என்னைப் போன்ற மனிதன்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (13-Sep-13, 7:13 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 104

மேலே