வெற்றி உன் கையில்
இளைஞனே!
இன்று ஏதாவது
நான்கு வேலை வைத்திருப்பாய்!
அதில் மூன்றில் ஜெயித்திருப்பாய்!
அதைக்கொண்டாடு!
விட்டுப்போன ஒன்றை நினைத்து
ஏன் கலங்குகிறாய்?
அதை நாளை பார்க்கலாம்!
இளைஞனே!
ஒவ்வொரு முறையும்
ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறாய்!
அப்புறம் என்ன கவலை?