விளங்கிக் கொண்ட விழிகள்
பழக ஆயிரம் பாரினில் உண்டு
பார்ப்போம் விழிகளை நாமும் விரித்து....!
அங்கே துளிர்ப்பது பசும் தளிராம்
அதற்குள் பச்சையம் அன்பென்பதாம்....
அகத்தின் அழகே முகத்தினிலே - அதை
அன்போடு பழகியது சிறு தளிரே
அடடா இனிமை அதிகாலை
அதனால் பிறந்தது இக்கவிதை....!
விழிகளில் விளக்கம் தெளிவானால்
விடியல் தினமும் இனிதாகும்