தீப ஒளி பரவட்டும் தீய இருள் கலையட்டும்

உலகெலாம் இன்பம் பெறுக
உவகையால் உளங்கள் மலர்க
ஒளியதாய் வாழ்வு சிறக்க
ஒற்ருமை உலகில் சனிக்க
வேற்ருமை மறைந்துபோக
மாட்சிமை மண்ணில் ஓங்க
மனைகளில் செல்வம் செழிக்க
மங்களம் நிதமும் நிகழ
அமங்கலம் ஒழிந்துபோக
அநீதிகள் தோற்றுப்போக
நீதிகள் உலகை வெல்ல
அடிமை நிலை தொலைந்த வாழ்வு
அனைவர்க்கும் கிடைப்பதாக..!

எழுதியவர் : புஸ்பராசன் (31-Oct-13, 5:38 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
பார்வை : 67

மேலே