என் காதலி......!


விழியில் வாளேந்தி
மொழியில் தேனேந்தி - என்
வழியில் விளக்கேந்தி வந்தாள்!

காதல் கருவாகி
கருத்தில் நிழலாடி -பொழியும்
கார்மேக உருவே!

வெயில் ஒளியாகி
வெண்மதி குளிராகி -தண்மதி
வெண்பனி உயிரானாள்!

கண்மேக நிலவை
காரிகை கூந்தல் மூடி
களி நடனமாடும்!

திருப்பாவை ஆண்டாளோ
திருமேனியன் மனையாளோ
திருத்தணிகையான் சேர்ந்த
திருக்குறத்தி இவள்தானோ!

சுண்ணாம்பு சேராத வெற்றிலையோ
சுடரில் கரையாத கற்ப்பூரமோ
சூரியன் பார்க்காத மொட்டோ
சுந்தரி தெய்வீக மெட்டோ!

இதயகோயிலின் தீபமே
இருட்டறையின் தெய்வமே
இசைந்தால் உயிர் வாழ்வேன்!

எழுதியவர் : விஷ்ணுதாசன் (17-Jan-11, 2:31 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
பார்வை : 486

மேலே