அழுந்திய மகிழ்ச்சி

வேலைக்கு ஆள் இல்லை
வேலை செய்ய முடியவில்லை
செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில்
செய்து களைத்து தவித்து போகும் நிலையில்
எப்போ படுப்போம் என்ற வேளையீல்
கதவு தட்டும் ஒலி நிதானமாக எழும்ப
சலித்துக் கொண்டே கதவைத் திறந்தால்
விருந்தினர்கள் ஒன்றல்ல பல பேராக நிற்க
என்ன செய்வது என்ற திகிலுடன்
வரவேற்றேன் அழுந்திய மகிழ்ச்சியுடன் .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-Nov-13, 11:32 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 560

மேலே