இரவு

இரைச்சல்களின் சாலைகளில் தினம் நடந்து
இரத்தம் சொட்டிய காதுகளை
ஓர் ஆமைகுஞ்சு போல்
போர்வைக்குள் உள்ளிழுத்து

ஒட்டகங்களை போல் ஓய்வின்றி
நீண்ட நிசப்தங்களின் மேல் பயணிக்க
ஒத்திகை பார்கிறது ஊமை மனசு

உருளுதல் உலாத்துதல் என்று சில
சர சரப்புகளினூடே
விழிகள் கதவடைக்க
பற்றிக்கொள்கிறது பயணம்
ஏகாந்தத்தின் ஸ்பரிசங்களில்

அமைதிக் கிண்ணங்களில்
மெய் கரைந்துருக

இதயம் வெடித்த
இலவம்பஞ்சு போல
காற்றோடு கைகோர்க்கிறது கனவு

மற்றுமொரு பொழுதின்
பிரசவம் ஒன்றிற்காய்....!

எழுதியவர் : பிரகாசக்கவி - (17-Nov-13, 2:57 pm)
Tanglish : iravu
பார்வை : 1092

மேலே