அம்மாவுக்காக

என்ன தவம் செய்தேனடி,
உன் மகளாய் நான் பிறக்க!
உன்னை அம்மா என்று அழைக்கவே,
தமிழ் மொழியினை கற்றேனடி..
இப்பிறவி ஒன்று போதாது
உன் சேயாய் நானிருக்க

உனக்கென்ன கைம்மாறு செய்யபோகிறேன்
என்னை நீ சுமந்ததற்காக !..
இனியேனும் ஜென்மம் எடுத்தால் - நீ
எனக்கு சேயாக வேண்டும்.. - நான்
உனக்கு தாயாக வேண்டும்.....

இனி என்ன வேண்டும்
இதைத்தவிர....

எழுதியவர் : மலர் பிரபா (18-Nov-13, 3:33 pm)
Tanglish : ammavukkaga
பார்வை : 179

மேலே