மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால்

உறவு வட்டத்துள்
உற்சாகமாய் வந்து
கல்லூரி வாழ்வில்
தோழியாக கைகோர்த்து
சிறகடித்தாய் ஒன்றாய்...!

பேசுவது குறைவு
படிப்பது நிறைய....
தேர்வு என்றால்
இரவைப் பகலாக்கி
விழித்திருந்து படிப்பாய்....!

திருமணம் கூடி வர
பெற்றோர் சொல்லேற்று
படிப்பை இடைநிறுத்தி
மணவாளன் கைப்பற்றி
வெளிநாடு புகுந்தாய் .........!

குடும்பம், குழந்தை என்று
வாழ்க்கையானபின்
நேற்றைய பேச்சுக்கள் மாறி,
குழந்தைகள் குறித்த பேச்சாய்
நேரம் போவது தெரியாமல்..!

அளவற்ற சுதந்திரமும்
குழந்தை வளர்ப்பும்
பண்பாட்டைப் பேணுதலும்
திசை மாறிப் போகாது
இன்றைய தேவையாய்.........!

தொலைவில் இருந்தாலும்
வாரத்தில் ஒரு தடவை
அலைபேசியில் வந்துவிடுகிறாய்....
சுமைகளைத் தாங்கவும்
சுகங்களைப் பகிரவும்.............!

மீண்டும் ஒரு ஜென்மமிருந்தால்
என் தோழியாக
என் அருகில் வந்துவிடு..........
உலகத் துயர் மறந்து
உன் அன்பில் மிதப்பதற்கு ....!!
---------------------------------------------------------------------

எழுதியவர் : சுசானா (30-Nov-13, 5:19 pm)
பார்வை : 1763

மேலே