வாழ்க்கை
ஆயிரம் மொழி உறங்கும்
அகாலப் பொழுதுகளில்
விழித்துக் கொள்கிறது
மனது
பிறப்புக்கும் இறப்பிற்கும்
இடையேயான நகர்வுப்
பொழுதுகளில்
எத்தனை எல்லைக்கோடுகள்
நாடுகளுக்கு மட்டுமல்ல
மனங்களுக்கும் தான் ..
புலரும் என தெரிந்தும்
புரியாமல் புலம்பித்தவிக்கும்
ஒரு கூட்டம்
தொலையும் என தெரிந்தும்
பத்திரப்படுத்தும் ஒரு கூட்டம்
பிறவி பிழை..
காதல் திருத்தம் எனத் தெரிந்தும்
அகாலப் பொழுதுகளில்
வந்த அன்புகளால்
சகாராவாகும் வாழ்க் கையோடு
விக்கித்து நிற்கும் ஒரு கூட்டம்
புரிதல் இடைப் பிரிதல்
எனச் சொல்லிச் சொல்லி
தம்மை
தாமே ஏமாற்றும் ஒரு கூட்டம்
வாஞ்சைகள் அதிகம் கொண்டு
வஞ்சகர் பலரையும் கண்டாலும்
பற்றுதல் பற்றி நகரும் வாழ்வுகள்
புரியாத புதிராய் விரியும் கேள்விகள் ???