இப்படிக்கு டஸ்ட் பின்

குப்பைதான் எனக்குள் போடவேண்டும் என்ற
குறிக்கோள் உங்கள் மனசில் வேண்டாம்......!

மண்ணை நிரப்புங்கள் எனக்குள் - அதில் ஒரு
மலர்ச் செடியை பதித்து வையுங்கள்.........!

எனக்கும் குழந்தை வளர்க்க ஆசை உண்டு
ஏனென்றால் நான் ஜடம் அல்ல.......!

குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து குழந்தையை
குதறி எடுத்த நாய்களென செய்தி படித்தேன்....

மனிதர்களே என் பூக்களை பறிக்காதீர்கள் - என்
மவுனத்திற்குள் ரத்தக் கண்ணீர் வழியும்......!

இப்படிக்கு

டஸ்ட் பின்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Dec-13, 2:04 am)
பார்வை : 90

மேலே