அவள் பார்த்து நீ வந்ததால்
சிலபல
எண்ணங்களால் படிந்த
என் மனதை
தெளிவு படுத்திய வார்த்தைகள்!
அறுசுவை உணவில்
அயர்ந்த என் தந்தை - தன்
புறங்கையில் ஒட்டியிருந்த
சோற்றுப்பருக்கையை மென்றுகொண்டே
என் தாயுடன் சொன்ன வார்த்தைகள்........
"என் தாய் இருந்தவரை-உன்னை
தாரமாகவே பார்த்த என் மனது
தாய் இறன்ஹ்தபிறகு-உன்னை
தாயாகவே பார்க்கிறது-காரணம்
அவள் பார்த்து நீ வந்ததால்"
என்று சொல்லிக்கொண்டே கை கழுவினார்
அவர் கழுவியது கை மட்டுமல்ல
என் மனதில் இருந்த
காதல் நினைவுகளையும்..........