kovaidinesh - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : kovaidinesh | 
| இடம் | : COIMBATORE | 
| பிறந்த தேதி | : 19-Jun-1986 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 04-Oct-2013 | 
| பார்த்தவர்கள் | : 123 | 
| புள்ளி | : 39 | 
நான் நானாக வாழ விரும்பும் சாதரண மாணவன்.....
வெட்டிச்சாய்த்து, சுட்டுக்கொன்று
இரத்தம் குடிக்கும் 
இனத்தாரின் நடுவே - ஒரு 
துளி வேர்வையில்  
உலகத்தின் பசியாற்றும் 
உழவனின் திருநாள் - எங்கள் 
தமிழனின் பெருநாள் .
ஏவுகணை வீசி, குண்டுமழை பொழிந்து 
நாட்டை (சுடு) காடாக்கும்
இனத்தாரின் நடுவே 
சாட்டை வீசி, முத்து (தானிய) மழை பொழிந்து
காட்டை பொன்னாக்கும்
உழவனின் திருநாள் - எங்கள் 
தமிழனின் பெருநாள் .
குடிதண்ணீர் வீடுக்குளத்தில் வழிந்தொழுக 
மூச்சுக் காற்றை  உஷ்னமாக்கும் குளிர்சாதனம் 
ஓயாமல் இயங்கும் இனத்தாரின் நடுவே 
குவளை நீரில் குடித்தனம் நடத்தும்
குடிசை முகப்பில் முகவரிகானும்
உழவனின் திருநாள் - எங்கள் 
தமிழனின் பெருநாள் .
பார்பவர்களின் விழியில் விழாமல் இருக்க 
பிரம்மன் முகத்தில் வைத்த கரும்புள்ளி 
உன் "மச்சம்"
(வெளிநாட்டில் காதலன், காதலியின் பிரிவால் 
இறந்தகால நினைவுகளை அசைபோடுசிறான்)
சாலையில்
வளைந்து வளைந்து  சென்றபோதும் 
மேடுபள்ளம்  ஏறி இறங்கும்  போதும் 
வேகத்தடையில்  நகரும்  போதும் 
முதுகிலே  சாய்ந்து  கொண்டு 
திட்டுவதாய்  நினைத்து 
காதோரமாய்  பாடினாய் 
இறுக  பிடித்து  இடையில்  செல்லமாய்  கிள்ளினாய் 
எதிரே  உன்  வெட்கம்  பார்த்து 
வந்தவர்களின்  பார்வை  மாற 
சென்றவர்களின்  கவனம்  சிதற 
மணித்துளிகள்  மழைத்துளியாய்  கறைய 
உந்தன்  விழிகளில் 
என்னை  மட்டுமே  நோக்கினாய் 
எந்தன்  அசைவுகளை 
மட்டுமே  ரசித்தாய் 
வலதுப்றக்  கண்ணாடியில்  -எந்தன் 
வாழ்க்கையை  பார்த்துக்கொண்டே 
நீ  சொ
(வெளிநாட்டில் காதலன், காதலியின் பிரிவால் 
இறந்தகால நினைவுகளை அசைபோடுசிறான்)
சாலையில்
வளைந்து வளைந்து  சென்றபோதும் 
மேடுபள்ளம்  ஏறி இறங்கும்  போதும் 
வேகத்தடையில்  நகரும்  போதும் 
முதுகிலே  சாய்ந்து  கொண்டு 
திட்டுவதாய்  நினைத்து 
காதோரமாய்  பாடினாய் 
இறுக  பிடித்து  இடையில்  செல்லமாய்  கிள்ளினாய் 
எதிரே  உன்  வெட்கம்  பார்த்து 
வந்தவர்களின்  பார்வை  மாற 
சென்றவர்களின்  கவனம்  சிதற 
மணித்துளிகள்  மழைத்துளியாய்  கறைய 
உந்தன்  விழிகளில் 
என்னை  மட்டுமே  நோக்கினாய் 
எந்தன்  அசைவுகளை 
மட்டுமே  ரசித்தாய் 
வலதுப்றக்  கண்ணாடியில்  -எந்தன் 
வாழ்க்கையை  பார்த்துக்கொண்டே 
நீ  சொ
காதலில் தோல்வியுற்ற காதலன் வெளிநாட்டில் இருந்து காதலிக்கு எழுதுகிறான்........................
விழிக்கும் விடியலை விட 
உறங்கும் இருளையே விரும்புகிறேன்
நேரில் பார்க்க முடியாத உன்னை
கனவிலாவது காணலாம் என்று!
வாசித்த கவிதையும், ஒலித்த பாடலும் 
நினைவில் நிற்கவில்லை 
நினைவில் நின்றதும், வந்ததும் 
உந்தன் ஒளியும், ஒளியும் மட்டுமே!
மலரின் வாசமும் அன்பரின் பாசமும்
ஒரு நாழிகை கூட உணரவில்லை 
காலம் மறந்து, எல்லைகள் படர்ந்து 
உணர்ந்தது உந்தன் உணர்வை மட்டுமே!
நீ எனக்கில்லை என்பதை உணர்ந்தும்
உறவுக்காக உயிரை  வதைக்கிறேன் 
உள்ளத்தில் கலந்த நீ 
உறவில் கலக்கப் போவது எப்போது?
உள்ளம் அழுதா
சந்தோசம் எப்போது
விளையாட்டில் 
தோல்விகளை வீழ்த்தி 
வெற்றிக்கோப்பையுடன் 
உன் முன்னாள்-நின்றபோதா?
பட்டங்கள் பலபெற்று 
சான்றோன் வாக்கில் மேதையாய்
பட்டயங்களை 
உன் கழுத்தில் அணியும் போதா?
பணத்தின்
மதிப்பறியா வயதில் 
பலநூறு ரூபாய்களை 
உன் காலடியில் - சமர்பிக்கும் போதா?
பரம்பரையின் 
பெயர் சொல்ல 
எந்தன்  வாரிசு - உந்தன்
மடிதனில் கொஞ்சிவிளையாடும் போதா?
மகனே
ஆயிரம் சந்தோஷம்  
உன்னால் நான் அடைந்தாலும் 
மறக்க முடியா சந்தோஷம் இரண்டு தான்
பிறந்த குழந்தயாய் 
எந்தன் மடியில் நீ அழுகையிலும் 
அருந்த கிழவியாய் 
உந்தன் மடியில் நான் இறக்கையிலும்......
காட்டை கழனியாக்கி 
நெடு வயல் கண்டு 
நீர் பாய்ச்சிய 
விதை நிலங்கள் எல்லாம் 
விலை நிலங்கள் ஆக...!!!
சேற்றில் கால்வைத்து  
உழுதிட்ட மனிதரெல்லாம்  
உழவுதொழிலை மறக்க 
ஏற்றம் இறைத்த
 கிணறுகளெல்லாம்
கேட்பாரற்று கிடக்க ....!!!
முற்றிய மணிகொண்டு
தலைசாய்க்கும் 
நெற்கதிர்களை மறந்தே....!!!
 
நாற்று நட்டும் களைபறித்தும்
நாட்டுப்புற பாடல்களை 
ஆடி பாடி மகிழ்ந்திட்ட 
நங்கைகள் எல்லாம் 
நற் கலைகளைமறந்தே....!!!
 
கரும்புதனை வெட்டிசாய்த்து
கனிசாறுஎடுத்தே 
சுவைத்திட்ட நாட்களை 
சுகமாய் எண்ணி ....!!!
நாளும் வாழ்தல் வேண்டி  
ஊரு விட்டு ஊரு சென்றே 
கல்சுமந்தும் மண்சுமந்தும்
கனத்த இதயத