உழவனின் எதார்த்தம்

அழகான
வெள்ளை நிறப் பிள்ளை
என்றால் ​எல்லோருக்கும் பிடிக்கும் ...

ஆனால் ,

இந்த உழவனுக்கு மட்டும்
கருநிறப் பிள்ளை மேல் தான்
ஆசை அதிகம் ...

அதனால் தான் ,

அவர்களின்
அம்மா
அந்த வானத்திடம்
தலை உயர்த்திக்
கேட்கிறான்...

உன்
வெள்ளை நிறப் பிள்ளை
நான்கு மாதத்திற்கு
மட்டும் இருக்கட்டும் ...

உன்
கருநிறப் பிள்ளை
எட்டு மாதத்திற்கு
என்னோடு இருக்கட்டும் ...!

எழுதியவர் : தமிழ் மகன் (2-Jan-14, 6:01 pm)
பார்வை : 226

மேலே