அகமும் தேகமும் சுகமடையும்

காத்திருக்கும் கன்னியவள்
களைத்ததன் காரணமென்ன
களையான முகத்தில் கவலை ஏனோ !
சோர்வாய் இருப்பதேனோ
சோலை குயில் வாடுவதேனோ !
சோகமும் வழிவதும் ஏனோ !
காளையவன் காத்திட வைத்தானா
காலையும் மாலையாய் மாறியதோ
கதிரவன்மறைந்து நிலவும் வந்ததா !
அந்திப் பொழுதும் அதிகாலை ஆனதோ
அன்றியும் அதனை உணராதது ஏனோ
அளவிலா ஆவலும் அடங்காததும் ஏனோ !
வந்திடும் பாதையை நோக்குவதேன்
தந்திடும் சுகத்தை நாடி இருப்பதேன்
காத்திடும் உன் காலமும் கரைவதேன் !
அழகு சிலையே உறங்கி ஓய்வெடு
அவனும் வருவான் அணைத்திடவே
அகமும் தேகமும் சுகமடையும் !
பழனி குமார்