இன்பமும் துன்பமும் நம் கையில்தான்

வாடாமல்லி பூ ஒன்று பறித்து
வண்ணப் பூவே உன் நடுவில் வைப்பேன்

அஷ்ட லிங்கத்தில் ஓர் உருவாய் - அது
அவதரிக்குமே சட்டெனவே...!

தேடியே மனிதரே செல்லவும் வேண்டுமோ
தெரியும் காட்சியில் தெய்வங்களே...

நாடிய அமைதி நெஞ்சினில் கிடைத்தால்
நகரும் நொடிகள் சொர்க்கங்களே.....

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால்
இன்னல்கள் என்பது இல்லையடா

இல்லாததை நினைத்து இருப்பதை வெறுத்தால்
இன்னலுக்கு முடிவே இல்லையடா....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Jan-14, 4:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 88

மேலே