நான் ரசித்த கல்யாணம் ....


தேதியும் குறிச்சாச்சி
பத்திரிக்கையும் அடிச்சாச்சி
சொந்தங்களுக்கும் சொல்லியாச்சி
பந்தலும் போட்டாச்சி

மஞ்சலும், குங்குமமும் வாங்கியாச்சி
பட்டுப்புடவையும் ,தாழியும் வாங்கியாச்சி
சீதன பொருட்களும் வாங்கியாச்சி

கல்யாணத்துக்கு
மாமனும் ,மச்சானும் வந்தாச்சி
உறவினர்களும் வந்தாச்சி

தாழி கட்டபோறேன் தாழி கட்டபோறேன்
என்று முன்று முறை சுற்றிவந்து
தாழியும் கட்டியாச்சி
எல்லோரிடமும் ஆசிர்வாதமும் வாங்கியாச்சி
கல்யாணமும் முடிஞ்சாச்சி

இனி விருந்துவைக்கும் நேரம் வந்தாச்சி
வாங்க எல்லோரும் சாப்பிடலாம் என்று சொல்லி

விளையாட்டை ரசித்துகொண்டிருந்த
எனக்கும் மண்சோருபோட்டது
எங்கள் தெரு குழந்தைகள் ....

நந்தி

எழுதியவர் : நந்தி (4-Feb-11, 6:08 pm)
பார்வை : 434

மேலே