தோழமைக்கு சில வரிகள்

பிரிவு என்பது நிரந்தரமில்லை
நம் வாழ்க்கை நாவலின் இன்னொரு அத்தியஜசமே
பிரிவு தரும் அனுபவங்களை உறவுகள் தருவதில்லை
முதன்முதலாக நீ எழுதி நான் ரசித்த கவிதை
முதன் முதலாக நாம் போட்ட சின்னச் சண்டை
முதன் முதலாக நாம் அரங்கேறிய பரதநாட்டியம் இவை யாவும் என் மனத்தில் இருந்து நின்கப் போவதில்லை
ஆனால் கடைசியாக நமக்குள் ஓர் பிரிவு
வந்த போது நீ கடைசியாக சொன்ன அந்த ஓராயிரம் அர்த்தமுள்ள வார்த்தை என் மனதில் பசு மரத்து அணியாக பதிந்து போய்விட்டது.
ஆகையால் நான் வழிமிது விழிவைத்து நாம் நட்பு மீது நம்பிக்கை வைத்து என்றோ ஓர் நாள் உன்னைச் சந்திக்கும் அந்த தருனத்திற்காக காத்திருக்கின்றேன் நண்பா

எழுதியவர் : suguna (5-Feb-11, 2:46 pm)
சேர்த்தது : suguna
பார்வை : 856

மேலே