நான் பேசும் கிள்ளைத் தமிழ்

பிஞ்சு நடை நான் பழக
உன் நெஞ்சினிலே எனை அமர்த்தி நான் பேசும் கிள்ளைத் தமிழ் கேட்டு மகிழ்ந்து
கொஞ்சும் தமிழ் என்னில் ஊட்டி
வஞ்சகமின்றி எனை வளர்த்த
என்னுயிர் நேசமே!
என் மெய்யில் உதிரும்
ஒவ்வொரு வியர்வைத் துளியும்
உன் உதிரத் துளிகளே!
மறுஜென்மம் ஒன்றிருந்தால்
நான் தாயாக வேண்டும்!
நீ என் சேயாக வேண்டும்!
என் மடிதனில் உனை தாங்கி
தொட்டில் கீதம் நான் பாட வேண்டும்!

எழுதியவர் : Akramshaaa (5-Feb-14, 8:24 am)
பார்வை : 43

மேலே