காதலன்றி வேறில்லை

அவள் சூடிய
ரோஜா பூவின்
ஓர் இதழ் எடுத்து
தடிமனான புத்தகத்திற்குள்
பதுக்கி வைப்பது
அலாதியானது..............!

தீர்ந்து போன
குவளை நீரின்
கடைசி சொட்டில்
விரல் நனைத்து
அவள் பெயர்
எழுதுவது சுகமானது......!

ஒற்றை பாகையளவில்
ஓரக்கண்ணால்
அவள் பார்ப்பதை
கண்களால் படம் பிடித்து
இதய அறைகளில்
மாட்டிவைப்பது
நிலையானது.................!

வினாத்தாளை பார்த்ததும்
மறந்து போகும்
விடைகளை போல
அவள் கண்கள்
பார்த்ததும் என்னை
மறப்பது இயல்பானது........!

அவளின் அதட்டல்
நடு நிசி கனவு
வரை நீள்வது
வரமானது........!

வழிதவறிய மானாக
அவள் நிழல்
என் மார்போடு
வந்து மோதுவது
என் பூர்வ ஜென்ம
புண்ணியமானது......!

அவள்
என் பிரபஞ்ச
வனத்தின் பகல் பூ......!

என் வானிலை
மாற்றங்களெல்லாம்
அவள் மீதான
காதலே அன்றி......
வேறொன்றும் இல்லை......!

எழுதியவர் : வித்யா (26-Feb-14, 10:58 am)
பார்வை : 175

மேலே