என் காதல்

சொட்டும் மழை சாரலா!
கொட்டும் புயல் மழையே!

உன் பார்வைக்கு என்ன பதில்?
உன்இல்ல சாலை ஓரத்தில்...

வேள்வியாய் இருக்கின்றேன்!
உனை எண்ணி எண்ணித் தவிக்கின்றேன்.

எட்டி எட்டிப் பார்ப்பாயோ!
தலை வெட்டி வெட்டிச் சாய்ப்பாயோ!!?

நான் பார்க்காத போது நூறு முறை நீ வருவாய்!
எதிர்பார்க்கும் போது வெளிவர மறுக்கின்றாய்!!

கைகுட்டையில் கடிதம் கொடுப்பாயோ?
கண்களில் மௌனமொழியாய் இருப்பாயோ!!

விரலில் போட்ட கோலமெல்லாம்
சேர்த்து வைத்து நான் ரசிப்பேன்!

உன் பார்வை ஒன்றே போதுமென்று
பாவி நான் கிடந்தே தவிக்கிறேன்!!

வந்துவிடு! வந்துவிடு! என்றே மனதால்
பல ஆயிரம் முறை ஜெபிக்கின்றேன்!

தினம்! தினம் என் தவிப்பு
மாநகரப் பேருந்தே சீக்கிரம் வந்துவிடு!!

எழுதியவர் : கனகரத்தினம் (26-Feb-14, 11:11 am)
Tanglish : en kaadhal
பார்வை : 105

மேலே